crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கண்டி – சுதுஹும்பொல மேற்கு கிராம அதிகாரி பிரிவு வெலமெதபார பிரதேசத்துக்கு பயணத்தடை

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

கண்டி மாநகர நகர எல்லைகுட்பட்ட சுதுஹும்பொல மேற்கு கிராம அதிகாரி பிரிவில் உள்ள வெலமெதபார பிரதேசத்துக்கு இன்று (01) முதல் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என கண்டி மாநகர ஆணையாளர் அமில நவரத்ன சற்று முன்னர் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான கொவிட்19 இறப்புகள் பதிவாகியுள்ளதை அடுத்து எழுந்த வாரியான பீ.சீ.ஆர். பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவ்வாறு 167 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதணையில் 71 பேருக்கு கோவிட்19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதனால் அதனை அடுத்து இப்பகுதிக்கான பயணத்தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் அமில நவரத்ன மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 5 =

Back to top button
error: