crossorigin="anonymous">
உள்நாடுபொது

மாகாண பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணிக்க முயன்ற 215 பேர் திருப்பியனுப்பப்பட்டனர்

மாகாணப் பயணக் கட்டுப்பாடுகளை மீறி வேறு மாகாணங்களுக்கு பயணிக்க முயன்ற 215 பேர் நேற்றைய தினம் (18) மீள திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்திற்கு உட்பிரவேசிக்கின்ற மற்றும் வெளியேறுகின்ற 14 இடங்களில் நேற்றைய தினம் மாத்திரம் 2,568 வாகனங்களில் இருந்து 4,942 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

மாகாணப் பயணக் கட்டுப்பாடுகளை மீறுகின்றவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: