crossorigin="anonymous">
உள்நாடுபொது

பயணக் கட்டுப்பாடு விதி மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 433 பேர் கைது

பயணக் கட்டுப்பாடு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த 24 மணி நேரத்தில் 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹாண தெரிவித்தார்.

கண்டி, கம்பளை மற்றும் குளியாபிட்டி ஆகிய இடங்களில் பலர் கைதுகள் செய்யப்பட்டுள்ளனர், கண்டியைச் சேர்ந்த 67 பேரும், கம்பளையைச் சேர்ந்த 56 பேரும், குலியாபிட்டியைச் சேர்ந்த 43 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை மீறி மாகாணங்களுக்கு வருகை தந்த 86 பேர் நேற்று திருப்பி விடப்பட்டனர் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹாண மேலும் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 45532 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 74 − 68 =

Back to top button
error: