crossorigin="anonymous">
உள்நாடுபொது

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

பாதிப்­புக்கள் ஏற்­ப­டு­மாக இருப்பின் சி.ஐ.டி. பொறுப்புக் கூற வேண்டும் - சட்­டத்­த­ரணி

தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தடுப்புக் காவலில் உள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் உடல் நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அவ­ருக்கு உட­ன­டி­யாக உரிய சிகிச்­சைகள் வழங்­கப்­ப­டாது ஏதும் பாதிப்­புக்கள் ஏற்­ப­டு­மாக இருப்பின் அதற்கு சி.ஐ.டி.யினரே பொறுப்புக் கூற வேண்டும் என அவ­ரது சட்­டத்­த­ரணி கௌரி சங்­கரி தவ­ராசா அறி­வித்­துள்ளார்.

சி.ஐ.டி.யின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரண­சிங்க, பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ரொஹான் பிரே­ம­ரத்ன மற்றும் பொறுப்­ப­தி­காரி ஜயந்த பயா­கல ஆகி­யோ­ருக்கு விஷேட கடிதம் ஊடாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கௌரி சங்­கரி தவ­ராசா இதனை அறி­வித்­துள்ளார்.

தடுப்புக் காவலில் உள்ள அசாத் சாலியின் மனை­வியின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கௌரி சங்­கரி தவ­ராசா இந்த கடி­தத்தை அனுப்பி வைத்­துள்ளார். அசாத் சாலிக்கு உரிய சிகிச்சையளிக்காது அவருக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் சி.ஐ.டி.யே பொறுப்புக் கூற வேண்டும் என்ற அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக அசாத் சாலி கைது செய்­யப்ப்ட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவ­ரது கைது மற்றும் தடுத்து வைப்­புக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்று அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 57 + = 60

Back to top button
error: