crossorigin="anonymous">
உள்நாடுபொது

2024 க. பொ.த. உயர் தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி

மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நள்ளிரவுக்குப் பின்னர் தடை

2024 க. பொ.த. உயர்தரப் பரீட்சை இம்மாதம் (நவம்பர்) 25ஆம் திகதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 20ஆம் திகதி வரை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

2024 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்கான விரிவுரைகள், மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் என்பன இன்று (19) நள்ளிரவுக்குப் பின்னர் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டு 333,185 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 6 =

Back to top button
error: