crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஓரளவு மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (27) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக கடும் காற்று வீசும். இடி, மின்னல் ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 15 = 23

Back to top button
error: