crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர்

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் பாராளுமன்றத்தில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இன்று (07) பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கப்படவுள்ளன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இன்று 07ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 08ஆம் 09ஆம் திகதிகளில் நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.

இதற்கு அமைய பெப்ரவரி 08ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர்  ஜனாதிபதி அவர்களின் தலைமையில் வைபரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவிருப்பதுடன், பாராளுமன்றத்துக்குத் தலைமைதாங்கும் ஜனாதிபதியினால் மு.ப 10.30 மணிக்கு அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 22 − = 21

Back to top button
error: