crossorigin="anonymous">
உள்நாடுபொது

“கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தின்” கீழ் 1500 மில்லியன் ரூபா

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

வரவு செலவுத் திட்டத்தில் “கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தின்” கீழ் 1500 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இவ்வாறு தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கான விசேட வேலைத் திட்டமாக உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் வசதிகளை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 61 − = 54

Back to top button
error: