crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

சிறுநீரக நோயாளர்கள் மற்றும் காச நோயாளர்களிற்கான கோவிட்19 தடுப்பூசி

யாழ் மாவட்டத்தில் உள்ள நாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நோயளர்களிற்கான கோவிட்19
எதிரான தடுப்பூசி நாளை 26 ஆம் திகதி சனிக்கிழமை ஏற்றப்பட உள்ளன

நாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நோயளர்கள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, பருத்தித்துறைபோன்ற ஆதார வைத்தியசாலைகளில் கோவிட்19 எதிரான தடுப்பூசி வழங்கப்படும்.

இவர்கள் தாம் சிகிச்சை பெறும் சிகிச்சை நியைத்திற்கான பதிவு (கிளினிக் கொப்பி , நோய் நிர்ணய அட்டை ) மற்றும் உரிய ஆவணங்களுடன் தமக்கு அருகில் உள்ள மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றுக்கு சென்று  தடுப்பூசிகளினை பெற்றுக்கொள்ள முடியும் .

18 வயதிற்கு மேற்பட்ட காச நோய் மற்றும் மார்பு நோய்களுக்காக சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் யாழ்ப்பாண காச நோய் சிகிச்சை நிலையத்திற்கு நாளை சனிக்கிழமை காலை சென்று தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: