crossorigin="anonymous">
உள்நாடுபொது

சிறைக்கைதிகளினால் சேதன பசளை உற்பத்தி திட்டம்

மட்டக்களப்பு சிறைக்கைதிகளினால் சேதன பசளை உற்பத்தி செய்யப்படவுள்ளதுடன்
சிறைக்கைதிகளை சேதன பசளை உற்பத்திக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு நாளை (26) சனிக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளினால் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிகழ்வு திருப்பெருந்துறையில் அமைந்துள்ள மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான பண்ணையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

முதன் தமுதலாக இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு அமைச்சர் லோகன் ரத்வத்த, விவசாய அமைச்சர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஐனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 + = 67

Back to top button
error: