crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஓட்டமாவடி – “மஜ்மா நகர்” கொரோனா மையவாடியில் 729 இறந்த உடல்கள் அடக்கம்

இலங்கை பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடையும் உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள “மஜ்மா நகர்” அமைந்துள்ள கொரோனா மையவாடியில் இதுவரையுள்ள தரவுகளின்படி
இம்மாதம் கடந்த 22 ஆம் திகதி  மாலை வரை 729 இறந்த உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி – “மஜ்மா நகர்” அமைந்துள்ள கொரோனா மையவாடியில் இதுவரை 690 முஸ்லிம்களின் இறந்த உடல்கள் (ஜனாஸாக்கள்) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 15 இந்துக்களின் உடல்கள், 15 கிறிஸ்தவர்களின் உடல்கள், 7 பௌத்த உடல்கள், 2 வெளிநாட்டவர்களின் உடல்களுமாக மொத்தம் 729 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் மேலும் சுட்டிக்காட்டினர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 7 = 3

Back to top button
error: