crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘சனல் 4’ குற்றச்சாட்டை விசாரிக்க நீதியரசர் தலைமையில் குழு நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கவும் அரசாங்கம் எதிர்பார்ப்பு

இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 தனது அறிக்கை நிகழ்ச்சியின் ஊடாக முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழுவொன்றை நியமிக்க இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் பெரும் சக்தியொன்று செயல்பட்டதாக முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கவும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையும் இறுதித் தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர் அது தொடர்பாக இடம்பெற்று வரும் இரண்டு விசாரணைகளின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 36 + = 44

Back to top button
error: