crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) முகமம்து சாத் கட்டாக் நேற்று (22) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) சந்தித்தார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள புதிய பாதுகாப்பு அமைச்சிற்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வருகை தந்தது இதுவே முதல் முறையாகும்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மத் ஸப்தார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையிலும் நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. சந்திப்பு கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 37 = 43

Back to top button
error: