crossorigin="anonymous">
ஆக்கங்கள்பொது

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவை வழங்க இணக்கம்

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவை வழங்க கப்பல் நிறுவனத்தின் சட்டத்தரணிகள் இணங்கியுள்ளனர்.

சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில், இலங்கைக்கு நேற்று(29) அறிவிக்கப்பட்டதாக சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடல் சூழலைப் பாதுகாப்பதற்காகவும் விபத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காகவும் இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இடைக்காலக் கொடுப்பனவு தொடர்பான விரிவான அறிக்கை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் கப்பல் நிறுவனத்தின் சட்டத்தரணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 23 + = 24

Back to top button
error: