crossorigin="anonymous">
உள்நாடுபொது

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீயால் சுற்றாடளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அறிக்கை

கொழும்பு துறை முகத்திற்கருகாமையில எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் இலங்கையின் சுற்றாடல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அறிக்கையொன்றை தயாரிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது.

எரிபொருள் கசிவு மற்றும் வேதியியல் தொடர்பான ஐ.நா தூதுக் குழுவொன்று தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் இலங்கைக்கு வந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே கடல் பகுதியில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் கடல் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு நிபுணர்கள் குழு நேற்று கப்பலை பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தது.

இந்த நிபுணர் குழுவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர், இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். அவர் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் என்றும் கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிபுணர் குழு, கப்பலில் தீ ஏற்பட்டதற்கான காரணம், அதனுடன் தொடர்புடைய கடல் அமைப்பு, அத்துடன் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 1 =

Back to top button
error: