crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் அமர்வு

ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் அமர்வு ஜனாதிபதி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

ஐந்தாவது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு நேற்றும் நேற்றுமுன்தினமும் (18) (17) ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

.இலங்கை இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 131 பேர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர். அதன் பிரதமர் பெத்தும் ரணசிங்க ஐந்தாவது பாராளுமன்றத்தின் அமர்வுகளை ஆரம்பிக்கும் முகமாக வரவேற்புரை நிகழ்த்தினார்.

இடம்பெற்ற அமர்வுகளின் போது உத்தேச இளைஞர் பாராளுமன்ற சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் பசிந்து குணரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: