crossorigin="anonymous">
உள்நாடுபொது

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய நடவடிக்கை

பண்டிகைக் காலத்தின் பின்னரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சோதனை

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்காக பொலிஸார் தொடர்ந்தும் சோதனையில் ஈடுபடுவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தமது சொந்த வாகனங்களில் பயணிக்கும்போது, அவதானத்துடன் செல்ல வேண்டும் எனவும் மது போதையில் வாகனம் செலுத்துவதைத் தவிர்ப்பதுடன் வீதி விதிமுறைகளை உரியவாறு பின்பற்ற வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.

பண்டிகைக் காலத்தின் பின்னரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, காவல்துறையினரும், புலனாய்வு பிரிவினரும், தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 − 30 =

Back to top button
error: