crossorigin="anonymous">
உள்நாடுபொது

நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு அழுத்தம் கொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் – BASL

உயர்நீதிமன்ற தீர்ப்பினால் எவரதும் சிறப்புரிமை மீறப்படவில்லை - சட்டத்தரணிகள் சங்கம்

உயர் நீதிமன்றம் சுயாதீன நிறுவனம் என்றும் உயர் நீதிமன்றம் வழங்கப்படும் தீர்ப்புகள் தொடர்பில், ஏனைய தரப்பினருக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிக்கை ஒன்றினூடாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது

தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் ஊடாக பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் எந்த தரப்பினரதும் சிறப்புரிமை மீறப்படவில்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.

இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் ஊடாக நீதிமன்றங்களின் சுயாதீனத்தன்மைக்கு அழுத்தம் கொடுப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 48 − = 40

Back to top button
error: