crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்ற நிலை இனி இருக்காது = ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் பிரேரணைக்கு எதிராக 113 வாக்கு, ஆதரவாக 1 வாக்கு

இலங்கைக்கு கடன்களை மறுசீரமைப்பதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்ற நிலை இனி இருக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (21) தெரிவித்தார்

இலங்கைக்கு கடன் வசதியினை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) நேற்று (20) அனுமதி வழங்கியது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (21) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார்.

இதன்போது, நாட்டின் கடன்களை மறுசீரமைப்பதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்ற நிலை இனி இருக்காது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கிடைக்கப்பெற்று கடன் வசதி மூலம் நாட்டின் வழமையான கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் அந்நியச் செலாவணி அதிகரிக்கும் போது, இறக்குமதி கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்த முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 19 = 27

Back to top button
error: