crossorigin="anonymous">
உள்நாடுபொது

பேச்சுவார்த்தைக்கு வரவில்லையாயின் வேலை நிறுத்த போராட்டம்

தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு கடுமையான எச்சரிக்கை

அரசாங்கம் நாளை (15) புதன்கிழமைக்கு முன்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுப்பு தெரிவித்தால் சுகாதாரம், கல்விச்சேவை, நீர் விநியோகம், மின்சாரம், தாதிமார், ஆசிரியர் சேவை, அரச மற்றும் அரசு சார் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை (15) புதன்கிழமை அனைத்து வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள், தேசிய புற்றுநோய் நிறுவனம், தேசிய மனநல நிறுவனம், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், இராணுவ வைத்தியசாலைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் பாதிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் நாளை 15ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் முக்கிய பல நகரங்களில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் .கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 42 = 51

Back to top button
error: