crossorigin="anonymous">
உள்நாடுபொது

மனித உரிமைகள் ஆணைக்குழு முன் பாதுகாப்பு அமைச்சர் அழைப்பு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை மார்ச் 13 ஆம் திகதி காலை 10 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் கடந்த 07, 08 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பான விசாரணைக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கையாண்ட முறைமை குறித்து தௌிவுபடுத்தல்களை பெற்றுக்கொள்ளவே அமைச்சர் டிரான் அலஸ் அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 78 − 76 =

Back to top button
error: