crossorigin="anonymous">
உள்நாடுபொது

நிதியை பெற்றுக்கொடுக்க தலையீடு செய்யுமாறு சபாநாயகருக்கு கடிதம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கடிதம் (24) அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வினவியபோது, குறித்த கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்ததுடன் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 56 − = 46

Back to top button
error: