crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேர்தலை திட்டமிட்டவாறு மார்ச் 09 நடத்த முடியாத நிலை?

தேர்தல் நடத்தப்படும் திகதி மார்ச் 03 ஆம் திகதி அறிவிக்கப்படும்

இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த முடியாது என அறிவித்துள்ளது.

தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மார்ச் மாதம் 03 ஆம் திகதி அறிவிக்கப்படுமெனவும் நேற்று (24) நடைபெற்ற கூட்டத்தின்போது தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு ரீதியாக தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையுடன் திறைசேரியிடமிருந்து தேவையான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் சபாநாயகரிடம் அறிக்கையிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 41 = 48

Back to top button
error: