crossorigin="anonymous">
உள்நாடுபொது

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எழுத்தாணை மனு விசாரணைக்கு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் டப்ளியு.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாணை மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு உயர் நீதிமன்றம் கடந்த 10ஆம் திகதி தீர்மானித்திருந்தது.

எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான தினமாக எதிர்வரும் 23ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னர் தமது மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மனுதாரர் நகர்த்தல் பத்திரத்தினூடாக உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய, குறித்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 60 + = 65

Back to top button
error: