crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஏ.எச்.எம்.பௌசி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம்

ஏ.எச்.எம்.பௌசி அவர்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (09) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக முன்னிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

கொழும்பு தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மொஹொமட் முஜிபர் ரஹூமான் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்ததையிட்டு ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஏ.எம்.எம்.பௌசி நியமிக்கப்பட்டுள்ளார்.

1937.10.13ஆம் திகதி பிறந்த பௌசி அவர்கள் 1959ஆம் ஆண்டு தீவிர அரசியலுக்குள் நுழைந்தார். 1968ஆம் ஆண்டு கொழும்பு நகரின் பிரதி மேயராகத் தெரிவு செய்யப்பட்ட அவர், 1973ஆம் ஆண்டு 16வது கொழும்பு நகர மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1993ஆம் ஆண்டு மேல் மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட பௌசி அவர்கள் 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். இதன் பின்னர் இவர் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 99 − 89 =

Back to top button
error: