crossorigin="anonymous">
உள்நாடுபொது

13 வது திருத்தம் நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து தேரர்கள் ஆர்ப்பாட்டம்

தேரர்கள் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (08) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வை ஜனாதிபதி நேற்று ஆரம்பித்து உரையாற்றிய போது பாராளுமன்றத்திற்கு அருகாமையில் மூன்று பீடங்களின் பிக்கு ஒன்றியத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பரகும்பா பிரிவேனா முன்பாக ஆரம்பமான பேரணி, பொல்துவ வீதியை வந்தடைந்த போது பொலிஸார் தலையிட்டதுடன் பிக்குகள் பொலிஸாரின் தடையைத் தாண்டிச் செல்ல முற்பட்ட போதிலும், பொலிஸார் அவர்களைத் தடுத்தனர்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிக்கு எதிராக பிக்குகள் நடத்திய போராட்டத்தில் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் இணைந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 3

Back to top button
error: