crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேர்தல் கண்காணிப்புக்கு நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி

உள்ளுராட்சிமன்ற தேர்தலை கண்காணிப்பதற்கு பஃவ்ரல் (PAFFREL), கஃபே(CAFFE), சி.எம்.ஈ.வி(CMEV), உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் 02 கண்காணிப்புக் குழுக்களுக்கு மாத்திரமே வாக்களிப்பு நிலையங்களுக்குள் கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

ஏனைய அமைப்புகள் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வெளிப்புற கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், தற்போது மாவட்ட மட்டத்தில் கடமையாற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அடுத்த வாரம் முதல் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 1

Back to top button
error: