crossorigin="anonymous">
உள்நாடுபொது

2022 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2022 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடப்பட்டுள்ளது.

2022 டிசம்பர் மாதம்‌ 18ஆம்‌ திகதி நாடளாவிய ரீதியில் 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையின்‌ பெறுபேறுகள்‌ நேற்று (25) வெளியிடப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமீத் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்த 334,805 மாணவர்களுள் 329,668 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகள் உரிய சுட்டெண்ணை சரியாக வழங்குவதன் மூலம் பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும்‌ என்பதுடன்‌ உரிய பரீட்சைப்‌ பெறுபேற்றை தரவிறக்கம்‌ செய்து அச்சுப்‌ பிரதியைப்‌ பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும்‌ செய்யப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 28 − 18 =

Back to top button
error: