crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தயார்

இலங்கை தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சிமன்ற தேர்தலை தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமைவாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக் குழு மேற்கொண்ட தீர்மானத்தை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு ஓய்வு பெற்ற கேர்ணல் விஜேசுந்தர தனது மனுவில் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார் அந்த மனு தொடர்பான விசாரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே தேர்தல் ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அதன்போது மேற்படி மனுவை எதிர்வரும் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக நீதிபதிகள் குழாம் தெரிவித்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 23 + = 25

Back to top button
error: