crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை கடற்படை தளபதியாக பிரியந்த பெரேரா

ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா 2022 டிசம்பர் 18 ஆம் திகதி முதல் வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டு இலங்கை கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

ஆயுதப்படைகளின் தளபதி மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவருமான கெளரவ
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவை, ஆர்எஸ்பீ**, யூஎஸ்பீ, என்டீயு, பீஎஸ்சீ 2022 டிசம்பர் 18 அன்று முதல் வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டு இலங்கை கடற்படையின் 25 வது கடற்படைத் தளபதியாக நியமித்தார்.

வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கொழும்பு ரோயல் கல்லூரியின் சிறந்த பழைய மாணவர் ஆவார். இவர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 05வது உள்வாங்கல் பிரிவில் கெடட் அதிகாரியாக 1987 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிறைவேற்று கிளையில் சேர்ந்தார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் ஆரம்பப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அந்த ஆட்சேர்ப்பில் மிகவும் திறமையான அதிகாரிக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர், 1989 ஆம் ஆண்டு துணை லெப்டினன்டாக அதிகாரத்தை ஏற்று, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கௌரவ கலைப் பட்டம் (பாதுகாப்பு ஆய்வுகள்) பெற்றார்.

வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா திருமதி மாலா லமாஹேவாவை மணந்தார், அவர்களுக்கு சச்சித் (24), ஷமல் (21) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 4

Back to top button
error: