crossorigin="anonymous">
ஆக்கங்கள்பொது

பேராசிரியர் ஜவாஹிருல்லா எழுதிய “நபிகளாரின் சமூக உறவு” நூல் வெளியீடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இந்தியா – தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எழுதிய “நபிகளாரின் சமூக உறவு” எனும் நூலின் வெளியீட்டு விழா நேற்று 09.12.2022, வெள்ளிக்கிழமை கொழும்பு தபால் கேட்போர் கூடத்தில்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இந்தியா – தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எழுதியுள்ள “நபிகளாரின் சமூக உறவு” எனும் நூலின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (09) கொழும்பு தபால் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டாளரும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவருமான என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற விழாவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்

கௌரவ அதிதிகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன், காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் உற்பட, அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்திய மற்றும் இலங்கையை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்

அகில இந்திய யூனியன் ஒப் முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் சிறப்பு பேச்சாளராகவும் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் வரவேற்புரையையும் நிகழ்த்தினார்கள்.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 4

Back to top button
error: