crossorigin="anonymous">
ஆக்கங்கள்பொது

“நபிகளாரின் சமூக உறவு” நூலின் வெளியீட்டு விழா கொழும்பில்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இந்தியா – தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எழுதியுள்ள “நபிகளாரின் சமூக உறவு” எனும் நூலின் வெளியீட்டு விழா நாளை (09) வெள்ளிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு கொழும்பு தபால் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டாளரும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவருமான என்.எம். அமீன் தலைமையில் இடம் பெறும் விழாவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

கௌரவ அதிதிகளாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், ஏ.எல்.எம்.அதாஉல்லா. இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் உற்பட மற்றும் வெளிநாட்டு மார், உள்நாட்டு முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்

அகில இந்திய யூனியன் ஒப் முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் சிறப்பு பேச்சாளராகவும் கலந்து கொள்வார், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

 

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 2 =

Back to top button
error: