crossorigin="anonymous">
பொது

பஸ் மாடுடன் மோதி விபத்தில் 19 பேர் காயம்

கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியின் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் 247 ஆவது கி.மீ. பகுதியில் பஸ் மாடுடன் மோதி இன்று (05) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் மாடுடன் மோதியதில் சாரதியால் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில் வீதியில் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸில் பயணித்த பயணிகளில் 19 பேர் விபத்தின்போது காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 ஆண்கள், 07 பெண்கள் மற்றும் 1 1⁄2 வயது ஆண் குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 77 − 67 =

Back to top button
error: