crossorigin="anonymous">
பொது

உயர்தர பரீட்சை காலப்பகுதியில் மின்துண்டிப்பை தடுக்க நடவடிக்கை

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாத காலப்பகுதியில் நடைபெறவுள்ளதால், மின் துண்டிப்பு செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (01) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மின் கட்டண அதிகரிப்பால் மேலும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி வருமென குறிப்பிட்ட அமைச்சர், மின் கட்டண அதிகரிப்பை தவிர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சபையில் தெரிவித்தார்

மின்சார சபை மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 6

Back to top button
error: