crossorigin="anonymous">
பொது

பதவிகளுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

இலங்கை நான்கு அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனத்தின் தலைவர் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அண்மையில் (22) அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இதற்கமைய ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான புதிய இலங்கைத் தூதுவராக உதய இந்திர ரத்னவை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேராவை நியமிப்பதற்கும், வெளிநாட்டு அமைச்சின் செயலாளராக திருமதி அருணி விஜேவர்தனவை நியமிப்பதற்கும்,

கைத்தொழில் அமைச்சின் செயலாளராக ஜே.எம்.டி.ஜெயசுந்தரவை நியமிப்பதற்கும், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராகப் பேராசிரியர் என்.டி.குணவர்தனவை நியமிப்பதற்கும் இதில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் தலைவராக காஞ்சன ரத்வத்தவை நியமிக்கவும் உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அமைச்சர்களான கௌரவ நிமல் சிறிபால.த சில்வா, கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல, கௌரவ விதுர விக்ரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சமல் ராஜபக்ஷ, கௌரவ ஜோன் செனவிரத்ன, கௌரவ தலதா அதுகோரல, கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, கௌரவ ரிஷாட் பதியுதீன், கௌரவ உதய கம்மன்பில மற்றும் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 93 − = 83

Back to top button
error: