crossorigin="anonymous">
பொது

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்-மத்திய மாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எட்வர்ட் அப்பிள்டன் மற்றும் மத்திய மாகாண ஆளுநரின் சட்டத்தரணி லலித் யூ கமகே ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் (21) இடம்பெற்றது.

நியூசிலாந்து உயர்ஸ்தானிகரும் மத்திய மாகாண ஆளுநரும் இலங்கை மற்றும்  நியூசிலாந்து இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கலந்துரையாடலின் பின்னர், இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை அடையாளப்படுத்தும் நினைவுப் பரிசில் பரிமாறிக்கொண்டனர்

இந்த சிநேகபூர்வ சந்திப்பில் மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரத்ன, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் அன்டன் திலகரத்ன, ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் உபுல் மகிந்தரத்ன மற்றும் பலர் கலந்துகொண்டனர்,

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 29 − = 25

Back to top button
error: