crossorigin="anonymous">
பொது

மனித கடத்தல் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் கைது

சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து மனித கடத்தலில் ஈடுபடும் சம்பவம் தொடர்பாக, மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் மற்றுமொரு அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் கைது (19) செய்யப்பட்டுள்ளார்.

பெண்களை ஏமாற்றி மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகவும், தொழில் முகவர்கள் மூலம் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வந்த உப முகவர் (தரகர்) ஒருவரையே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரால் ஏமாற்றப்பட்டு வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் துன்புறுத்தலுக்குள்ளாகி, மீண்டும் நாடு திரும்பியதையடுத்து பொலிஸாருக்கு மேற்கொண்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 51 − 46 =

Back to top button
error: