crossorigin="anonymous">
பொது

வரிச்சுமையால் சுவாசிக்க முடியாமல் உயிரிழக்க நேரிடும் – ஜீ.எல்.பீரிஸ்

மக்களிடம் திருடப்பட்ட பணத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தை பெற்று மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி, திருடப்பட்ட பணத்தை பெற்று மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

வரம்பற்ற வரிச்சுமையால் எதிர்வரும் காலங்களில் மக்கள் சுவாசிக்க முடியாமல் உயிரிழக்க நேரிடும் என்று தெரிவித்த அவர், கடந்த காலங்களில் மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தை மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிக வரிச் சுமையை மக்கள் மீது சுமத்துவதை விடுத்து, மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் திறைசேரியில் சேர்ப்பதன் மூலம் வருமானத்தைப் பெறுவதற்கான வழிகள் குறித்து அரசாங்கம் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 81 = 84

Back to top button
error: