crossorigin="anonymous">
உள்நாடுபொது

“சிறந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்”- அமைச்சர்

இலங்கையில் கொவிட்19 தொற்று நிலைமை தணிந்து சிறந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முதற் கட்டமாக ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு கொவிட்19 தொற்று தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கை அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.

பாடசாலைகளை மீண்டும் படிப்படியாக திறக்கக்கூடிய பின்புலத்தை முறையாக வகுப்பது தொடர்பில் இன்று (16) நடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 14 − 4 =

Back to top button
error: