crossorigin="anonymous">
பொது

பாராளுமன்றத்தை பார்வையிட வந்த மாணவர்கள் சபாநாயகரை சந்திப்பு

இலங்கை பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்காக இன்று (01) வருகை தந்த மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவ மாணவியருக்கு கௌரவ சபாநாயகரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இந்த மாணவர்கள் கௌரவ சபாநாயகருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் கலந்து கொண்டு தெளிவுபடுத்தல்களையும் பெற்றுக் கொண்டனர்.

பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய பாராளுமன்றத்தில் உள்ள பொதுமக்கள் கலரியிலிருந்து பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடப் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

பாடசாலை அதிகாரிகள் தமது விண்ணப்பத்தை படைக்கலசேவிதருக்குக் கடிதம் மூலம், தெலைநகல் மூலம் (0112777473/ 0112777335) அல்லது www.parliament.lk என்ற இணையவழியூடாகச் சமர்ப்பிக்க முடியும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 47 − 40 =

Back to top button
error: