crossorigin="anonymous">
பொது

2023 வரவுசெலவுத்திட்ட இரண்டாவது மதிப்பீடு

ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீட்டு சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றுவார்

2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக இன்று நவம்பர்  14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (27) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இதற்கமைய ஜனாதிபதியும், நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க இன்று பி.ப 1.30 மணிக்கு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக சமர்ப்பித்து உரையாற்றுவார்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கவிருப்பதுடன், இதன் மீதான வாக்கெடுப்பை நவம்பர் 22ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை மீதான விவாதம் நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பிக்கவிருப்பதுடன், டிசம்பர் 08ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்த இணங்கப்பட்டது.

இதற்கமைய நவம்பர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 08ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர கிழமையின் ஏனைய நாட்களில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 + = 44

Back to top button
error: