crossorigin="anonymous">
பொது

சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு உறுப்பினர் நியமணம்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் பிரதிச் சபாநாயகரை தவிசாளராகக் கொண்ட சட்டவாக்க நிலையியற் குழுவில் பணியாற்றுவதற்காக குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட தெரிவுக் குழுவினரால் பெயர் குறிப்பிடப்பட்ட உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா, கௌரவ சிசிர ஜயகொடி, கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, கௌரவ தயாசிறி ஜயசேக்கர, கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, கௌரவ பைஸால் காசிம், கௌரவ அஜித் மான்னப்பெரும,

கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ கோவிந்தன் கருணாகரம், கௌரவ இம்ரான் மஹ்ரூப், கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ மதுர விதானகே, கௌரவ (சனாதிபதி சட்டத்தரணி) ஜயந்த வீரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 26 = 36

Back to top button
error: