crossorigin="anonymous">
பொது

ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோ

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களை பாதித்து வரும் சமூக-பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது.

நிதி உதவி மூலம் உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மனிதாபிமான உதவியை அத்தியாவசிய தேவை தேவைப்படும் குடும்பங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இலக்காகக்கொண்டு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்கள் நீண்ட கால சமூக-பொருளாதார நெருக்கடியின் கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும், அவர்களின் உணவுப் பாதுகாப்பு முறையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் சமூக பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடி முகாமைத்துவ ஆணையாளர் ஜனுஸ் லெனாச்சிக் (Janez Lenarčič) தெரிவித்துள்ளார்.

புதிய மனிதாபிமான உதவி மூலம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதரவை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 − = 29

Back to top button
error: