crossorigin="anonymous">
பொது

சிறுவர் பாலியல் தொந்தரவு தகவல் ‘1929’ இலக்கத்துக்கு வழங்கவும்

சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு உட்படுத்துபவது தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்துக்கு வழங்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோரியுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இணையத்தளமூடாக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிறுவர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர்.இதன்போது, பலர் சிறுவர்களை பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.

இதுபோன்ற பல சம்பவங்கள் தற்போது பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

இணையத்தளமூடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுகிறார்கள் என்பது தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்துக்கு வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: