crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் மழையுடனான காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையில் மத்திய ,மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் இன்றும் அடிக்கடி மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பிரதேசங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி இடம்பெறக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14) காலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் இந்தப் பிரதேசங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்ப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று இரவு 9.30 மணிவரையிலான காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொடவில் 99.0 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கேகாலை மாவட்டத்தில் முதுகமுவ என்ற இடத்த்தில் 78.0 மி.மீ , இரத்தினபுரி மாவட்டத்தில் கீரகல என்ற இடத்தில் 72.5 ம.மீ , குடாவ என்ற இடத்தில் 66.5ம.மீ கம்பஹா மாவட்டத்தில் டன்சிலவத்த என்ற இடத்தில் 57.0 ம.மீ மழை வீழ்ச்சி இடம்பெற்றுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 5 =

Back to top button
error: