crossorigin="anonymous">
உள்நாடுபொது

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றசாட்டில் 1,353 நபர்கள் கைது

இலங்கை முழுவதும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றசாட்டில் (13) நேற்று 1,353 பேர் அதிகூடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சட்ட விதிகளை மீறிய குற்றசாட்டில் இதுவரையில் 31,395 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இராஜகிரிய – பண்டாரநாயக்கபுர பகுதியில் ட்ரோன் கெமராக்கள் மூலம் நேற்று நடத்தப்பட்ட கண்காணிப்பின்போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் 14 பகுதிகளில் நேற்று மாத்திரம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 33 − = 23

Back to top button
error: