crossorigin="anonymous">
பொது

குரங்கு அம்மை நோய், பொது சுகாதார அவசர நிலை – W H O

சர்வதேச அளவில் குரங்கு அம்மை நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ளதன் காரணமாக உலக சுகாதார நிறுவனம் (W H O) சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது

சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடன அறிவிப்பை உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) அறிவித்துள்ளார்.

குரங்கு அம்மை நோய் தொடர்பாக வல்லுநர் குழு உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 70 -க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை இப்போது தொற்று பரவி உள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் 75 நாடுகளில் சுமார் 16,000 குரங்கு அம்மை பாதிப்புகள், உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 77 − 75 =

Back to top button
error: