crossorigin="anonymous">
பொது

பொலிஸ் ஊரடங்கு நீக்கம் – இலங்கை பொலிஸ் தலைமையகம்

மேல் மாகாணத்தில் நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிஸ்ஸை, கொழும்பு வடக்கு, தெற்கு, மத்தி ஆகிய ஏழு பொலிஸ் பிரிவுகளில் நேற்று (08) இரவு 9 மணி முதல் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று (09) காலை 6 மணி முதல் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் இன்று (09) அறிவித்துள்ளது.

இலங்கையில் நேற்று (08) இரவு 9 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அடங்கலாக பல தரப்பினர் கடும் விசனத்தையும், எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று (09) பாரிய போராட்டத்தை கொழும்பில் முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 36 + = 38

Back to top button
error: