crossorigin="anonymous">
பொது

ஹிருணிக்கா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

கொழும்பு – கோட்டை இலங்கை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கமே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் எனவும் அவர் பதவி விலகவேண்டும் என்றும் கோரி, இன்று காலை ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுடன் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யுத்த வீரனான கோட்டாவை ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே வரச் சொல்லுமாறு கோஷமிட்ட ஹிருணிக்கா, பிரதான ஜனாதிபதி மாளிகை நுழைவாயிலுக்கு முன்னால் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி வரை ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே தாம் தங்கியிருக்கப்போவதாக ஹிருணிக்கா தெரிவித்தார்.

இதனையடுத்து கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஹிருணிக்கா உட்பட குழுவினர் பொலிஸ் பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டிருந்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கைது செய்யப்பட்ட ஹிருணிக்கா உட்பட குழுவினரை பார்வையிட பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார்

ஜனாதிபதி மாளிக்கைக்கு தடைகளை மீறி செல்ல முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது செத்தம் வீதியில் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 3 =

Back to top button
error: