crossorigin="anonymous">
உள்நாடுபொது

பெருந்தோட்டக்கம்பனிகளின் வெற்றுக்காணிகளில் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரியுங்கள் – ஜனாதிபதி பணிப்புரை

பெருந்தோட்டக்கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத அனைத்து நிலங்களையும் கண்டறிந்து, அவற்றில் உணவுப்பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெருந்தோட்டத்துறை முகங்கொடுத்திருக்கும் சவால்கள் தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண, அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜி.தர்மகீர்த்தி மற்றும் அமைச்சின் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட உரிய அதிகாரிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9,000 ஹெக்டேயர்களுக்கும் அதிகமான பயிரிடப்படாத நிலங்கள் உள்ளன. 23 கம்பனிகளுக்குச் சொந்தமான அந்த நிலங்களில் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு ஏற்ற பயிர்களை இனங்கண்டு, அவற்றைப் பயிரிடுபவர்களுக்கு அந்த நிலங்களை வழங்குவேண்டியதன் அவசியத்தையும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தேயிலை ஏற்றுமதியினால் நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச்செலாவணி வெளிப்படைத்தன்மையுடன் பேணப்படவேண்டும். அதற்காகத் தேயிலை ஏலத்தை டொலர்களில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும் இக்கலந்துரையாடலின்போது பெருந்தோட்டத்துறையில் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக எரிபொருளை வழங்கும்போது முறையான செயற்திட்டமொன்றைப் பின்பற்றவேண்டியதன் அவசியம் குறித்து ஆராயப்பட்டது.

அத்தோடு அமைச்சு அல்லது

பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு முன்னுரிமை வழங்கத்தீர்மானிக்கப்பட்டது.

இதுவரையான காலத்தில் இப்போது தேயிலை, இறப்பர், தென்னை உள்ளிட்ட ஏற்றுமதிப்பயிர்களுக்கு அதிக விலை வழங்கப்படுகின்றது என்றும் இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 66 − 59 =

Back to top button
error: